நாவல்பழ ருசி
ஒரு ஜென் குருவிற்கு மிகவும் வயதாகி விட்டது மரணம் நெருங்கி வருவது தெரிந்தவுடன் தன்னுடைய சீடர்களை அழைத்தார். சீடர்கள் அனைவரும் குரு தங்களுக்கு ஏதோ சொல்லிக்கொடுக்கப் போகிறார் என்று அருகில் வந்தார்கள். "நான் இன்று மாலை நேரத்திற்குள் இறந்துவிடுவேன்" என்று தெரிவித்தக் குருவை அவர்கள் அனைவரும் கவலையுடன் பார்த்தனர். விஷயத்தை அறிந்தவுடன் வெளியில் சென்றிருந்த சீடர்கள், ஆசிரமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள், குருவிற்குப் பழக்கமானவர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் அவரைப் பார்ப்பதற்காக வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது ஆசிரமத்தில் இருந்த அனுபவம் வாய்ந்த சீடர் ஒருவர் கடைவீதிக்குப் புறப்பட்டார். மற்ற சீடர்களுக்கெல்லாம் ஒரே கோபம். குரு மரணப் படுக்கையில் இருக்கும்போது கடைவீதியில் என்ன வாங்க வேண்டியிருக்கிறது என்று சத்தம் போட்டார்கள். " நம்முடைய குருவிற்கு நாவல் பழம் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு அதை வாங்கித் தரலாம் என்று தான் நான் கடைவீதிக்குப் புறப்பட்டேன்" என்று பதிலளித்தார் அந்தச் சீடர். " சரி சரி சீக்கிரமாக வாங்கி வந்து குருவிற்குக் கொடுத்து விடு" என்றா