மூன்று மீன்கள் (Three fishes)
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. அவை மூன்றுப் பேரும் நல்ல நண்பர்கள். அவைகள் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக மகிழ்ச்சியா வாழ்ந்து வந்தன.
ஒரு நாள், மீனவர்கள் இந்த குளத்தைப் பார்த்து. ஆக! இந்த குளத்தில் நிறைய மீன் இருக்கிறது.
நாளை இங்கே வந்து மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட மூன்று மீன்களில் ஒன்று, மற்ற மீன்களைப் பார்த்து, இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும் என்று சொல்லியது.
அதற்கு இரண்டாம் மீன், என்ன அவசரம்? அந்த சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம். அந்த நேரததில் எதாவது தந்திரம் செய்யது. தப்பிதுக் கொள்ளலாம் என்று கூறியது.
ஒன்றாம் மீன் இந்த கருத்தை ஒப்புக் கொள்ளாமல். அப்பொழுதே அந்தக்குளத்தை விட்டு வேறு குளத்திற்கு சென்று விட்டது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் மீன் அந்தக் குளத்திலே தங்கிவிட்டன. பேசியப்படி மறுநாள் மீனவர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்பொழுது வலையில் சிக்கிய இரண்டாம் மீன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது.
அதைக்கண்ட ஒரு மீனவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் தெரியாமல் தண்ணீர்க்குள் புகுந்து மறைந்தன.
மூன்றாம் மீனும், மற்ற மீன்களையும் மீனவர்கள் சிக்கி மடிந்துப்போயின.
முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவுச் செய்பவன் உறுதியாக பிழைத்துக் கொள்வான். அவ்வப்போது சிந்தித்து செயல்ப்படும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான்.