எலியும், தவளையும்
ஒரு காட்டில் ஒரு எலியும், ஒரு தவளையும் நண்பர்களாக இருந்தன. அந்த காட்டில் கோடை காலம் ஆரம்பம் ஆனது. அதனால் தவளை வாழ்ந்துவந்த குளத்தில் நீர் வற்ற ஆரம்பித்தது.
இதை தன் நண்பர் எலியிடம் சொல்லி வருந்தியது. அதனால் எலி தன் நண்பர்க்கு உதவ நினைத்து அங்குமிங்கும் தேடி அலைந்து ஒரு குளத்தைக் கண்டுபிடித்து. தன் நண்பான தவளையை அங்கு அழைத்துசெ சென்றது. அங்கு சேர்ந்து இருவருக்கும் குளம் யாருக்கு சொந்தம் என்பதில் சண்டை ஏற்ப்பட்டது. இதனால் இருவரும் தன் இனத்தவரை உதவிக்கு அழைத்தது.
சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயிற்று. இதனை பார்த்த ஒரு பருந்து, மற்ற பருந்துகளை அழைத்து அவற்றை அவைகளுக்கு விருந்து ஆக்கின.
நீதி: "ஊர் இரண்டுப்பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்".