காக்காயின் பாட்டு
ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தது. அதுக்கு யாருமில்லை அதனால் அதற்கு உண்டான தேவைக்களை அதான் பாத்துக்கணும்.
அதற்கு அது வைத்திருந்த வடை கடை தான் ஆதாரம்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தது. அப்ப மரத்துல உட்கார்ந்து இருந்த காக்கா, பாட்டி இல்லாத நேரம் பார்த்து ஒரு வடையை எடுத்து போயி திரும்ப மரத்துல போய் உட்கார்ந்து.
அந்த வழிய வந்த ஒரு நரி, காக்கா வாயில் வடையை பார்த்த நரிக்கு எச்சில் உரியது. இப்படியாவது காக்காவிடம் இருந்து வடையை வாங்கிவிட வேண்டும் என யோசித்தது.
காக்காவிடம் போய் நரி, நீ ரெம்ப அழகா இருக்க அதைப்போல் உன் குரலும் அழகாதானே இருக்கும். அதனால் நீ ஒரு பாட்டு பாடுவே என்றது.
காக்காவும் யோசிக்கமா பாட்டு பாட வாயை திறந்தது. அப்ப வாயிலிருந்த வடை கீழ விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு ஓடியப்போச்சு காக்கா ஏமாந்துப்போச்சு.
நீதி: "பிறரை நாம் ஏமாத்த நம்மல ஏமாத்த ஒருத்தன் இருப்பான்".