காடையும் அதன் குஞ்சுக்களும்


ஒரு கிராமத்தில் விவசாயி இருந்தாரு அவர் வயலில் நெல் விதைச்சு இருந்தார், அது நல்ல வளர்ந்து அறுவடைக்கு ரெடியான நேரம் .

அதில் ஒரு காடை கூடுக்கட்டி அதில் குஞ்சு பொரிச்சு இருந்தது. அந்த குஞ்சுகள் ரெம்ப சிறியதா இருந்ததால் அந்த குயிஞ்சுகனால் பறக்க முடியாது. ஆகவே அம்மா காடை கொடுக்கும் உணவை சாப்பிட்டு அங்கேயே இருந்தன.

ஒரு நாள் விவசாயி அங்க வந்து பார்த்தார் நெல்கள் நல்ல வளர்ந்து இருந்தது. அதை பார்த்த விவசாயி நாமக்கு உதவிக்கு யாராவது கிடைச்சா நாளைக்கு அறுவடை ஆரம்பித்தலாம் என்றார்.

இதை கேட்ட குஞ்சுகள் தன் அம்மாவிடம் அதைப் பற்றி  கூறியது. அதற்கு அம்மா காடை நிச்சியம் நாளை அறுவடை நடக்காது. அதைப்போல் எதுவும் நடக்கல.

கொஞ்ச காலம் கழித்து விவசாயி வந்தார். அதைப்போல் எப்படியாவுது நாளை பக்கத்து ஊருல இருந்து ஆட்க்களை வரச்சொல்லி நிச்சியம் அறுவடையை முடிக்கணும் என்று கூறினார். இதை கேட்ட குஞ்சுகள் ரெம்ப பயந்துப்போய்னா. தன் அம்மாவிடம் நடந்த விஷயத்தை குஞ்சுகள் கூறியது. அம்மா காடை இன்னும் நமக்கான நேரம் வரவில்லை என்றது.

அதைப்போல் நடந்தன. இப்படியே காலம் சென்றன. ஒரு நாள் அவசரமாக வந்த விவசாயி இனி யாரையும் நம்ப தேவையில்லை நாளை நாமே அறுவடைக்கு பண்ணவேண்டியது தான் என்றார். இப்பொழுது இதை அம்மா காடை கேட்டது.

தன் குஞ்சுக்களை அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் புதருக்கு சென்றது. அப்ப ஒரு குஞ்சு கேட்டது அம்மா ஏன் நாம் இப்படி அவசரமாக செல்லவேண்டும் என்றது.

அதற்கு அம்மா காடை, எப்ப விவசாயி மற்றவரை நம்பாமல் தன்னை நம்பினரோ நிச்சியம் நாளை அறுவடை நடக்கும் என்றது.

நீதி: தன் கையே தனக்கு உதவி.




Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்