நிபந்தனை!



ஒரு நாள் இரவு ஓஷோவும், ஒரு அரசு அதிகாரியும் ஒருவரும் ஹோட்டல் ஒன்றில் அடுத்தடுத்த அறையில் தாங்கினர்.

அப்பொழுது இருபது முப்பது நாய்கள் அந்த ஹோட்டல் சுற்றி குறைத்துக்கொண்டே இருந்தன. அந்த அதிகாரியால் தூங்கவே முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அவர் பயணம் மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. அதை நினைக்க நினைக்க அதிகாரிக்கு கோபம் அதிகமானது.

நாய்களோ, வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஒஷோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். ஒஷோவை எழுப்பிய அதிகாரி, " என்ன மனிதர் நீங்கள்.. இவ்வளவுக்கு சத்ததுக்கு மத்தியில் எப்படி உறங்க முடிகிறது? என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார், " அந்த நாய்கள் உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை, கோஷமிடவில்லை. பாவம், அந்த நாய்களுக்கு இங்கு ஒரு அதிகாரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிக்கை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை தங்களுக்குரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள்!" என்றார்.

" நாய்கள் இப்படி ஒயாமல் குறைந்தால் நான் எப்படித் தூங்க முடியும்? என்றார் அமைச்சர்.

ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குறைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்" என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார், 'இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும் போது நீ வெறுப்படைகிறாய்" என்கிறார்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்